வெள்ளி, 23 செப்டம்பர், 2011

நெஞ்சில் நின்ற ராகம்

வணக்கம் உறவுகளே... வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் பகுதியூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... இந்த வாரம் நெஞ்சில் நின்ற ராகத்தில் பகிர்ந்து கொள்ளும் பாடல் "அம்மம்மா தம்பி என்று நம்பி..."


பாடல் வரி...

"அம்மம்மா
தம்பி என்று நம்பி அவள் உன்னை வளர்த்தாள்..
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தாள்..
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ..

அம்மம்மா..
தம்பி என்று நம்பி அவள் உன்னை வளர்த்தாள்..

"கையில் வைத்து காத்திருந்தால்
காலடியில் காத்திருக்கும்
நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு
இதில் சொந்தமின்றி பந்தமின்றி
வந்த வழி நினைவுமின்றி
பிள்ளைகளும் பிறந்திருக்கும் வீடு"

ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே..
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே..
அது நாடகமா…. இது நாடகமா…
அது நாடகமா…. இது நாடகமா…
இங்கு நான் காணும் வேஷங்கள் கொஞ்சமல்லவே..
நான் இது போன்ற வேஷத்தில் வந்ததில்லையே..

அம்மம்மா..
தம்பி என்று நம்பி அவள் உன்னை வளர்த்தாள்..

"தங்கை என்னும் இளைய கன்று..
தாய் வீடு வந்ததென்று..
என்னுடைய நாடகத்தில் காட்சி..
அவள் கொண்டவனை பிரிந்து வந்து..
கோலம் கொண்டு நிற்பதனை..
கண்டதற்கு இன்னொருவன் சாட்சி"

கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது..
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது..
அது பாசமன்றோ… இது வேஷமன்றோ….
அது பாசமன்றோ… இது வேஷமன்றோ….
அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளை அல்லவோ..
இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழை அல்லவோ..

அம்மம்மா..
தம்பி என்று நம்பி அவள் உன்னை வளர்த்தாள்..."



அழகான கருத்துக்கள் பொதிந்த அற்புதமான பாடல்.... சிவாஜி கணேஷன்,ஸ்ரீ காந்த், உஷா நந்தினி, M.N. நம்பியார், V.K ராமசாமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம். ஒரு தாய் போல கண்ணும் கருத்துமாக வளர்த்த தம்பியை எண்ணி, பாசத்துடன் ஒரு அண்ணன் பாடும் பாடல்.... வீட்டின் நிலையையும், தங்கையின் நிலையையும் பாடலூடாக, அண்ணன் வெளிப்படுத்துகின்றார். சிவாஜியின் நடிப்பு ஒரு உண்மையுள்ள அண்ணனின் பாசத்தின் வலிமையை எடுத்துக்காட்டுகின்றது.



திரைப்படம்: ராஜபார்ட் ரங்கதுரை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
வருடம்: 1973

அழகான கூட்டணியில் (விஸ்வநாதன்,கண்ணதாசன்,சௌந்தரராஜன்,சிவாஜி கணேஷன்) அமைந்த திரைப்படம். நிச்சயம் உங்கள் மனதையும் இப்பாடல் உருக வைத்திருக்கும். மீண்டும் அடுத்தவாரம் மற்றுமொரு நெஞ்சில் நின்ற ராகத்துடன் சந்திக்கின்றேன்....!!

1 comments:

Balu சொன்னது…

பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்.

கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்

அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்


- கவிஞர் கோ கண்ணதாச



திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk

http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo



Online Books
http://www.vallalyaar.com/?p=409



http://sagakalvi.blogspot.com/


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி

கருத்துரையிடுக